பண்டாரகம, ஹொரணை வீதியின் கொத்தலாவல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் வாகனம் ஒன்றிலும் மற்றும் வேன் வாகனம் ஒன்றிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கள் முதலில் மோட்டார் வாகனத்தில் மோதி தூக்கி எறியப்பட்ட நிலையில் ஹொரணை பகுதியில் இருந்து வந்த வேனில் மோதுண்டுள்ளது.
விபத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்த மோட்டார் வாகனத்தின் சாரதியும் வேன் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
விபத்தில் ஒருவர் பலி - தூக்கி எறியப்பட்ட மோட்டார் சைக்கிள்! - சிசிடிவி காணொளி!
- Master Admin
- 08 April 2021
- (934)

தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (440)
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு...
- 06 June 2024
- (175)
இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்...
- 26 March 2024
- (376)
வாட்ஸ் அப்பில் Storage அதிகமாகிவிட்டதா?...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.