பாகிஸ்தான் போராட்டக்களத்தில் ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தேசிய கொடி ஏந்தி பெரும் கூட்டத்தினர் நிற்கும் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பாகிஸ்தானை சேர்ந்த பஷ்தூன் தபுஸ் இயக்கத்தினர் (பிடிஎம்) ஒன்றிணனைந்து இஸ்லாமாபாத் நகரில் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படம், பிடிஎம் பயங்கரவாதிகள் வெளிப்படையாக இந்திய தேசிய கொடியை அசைக்கின்றனர். அவர்களின் தீய எண்ணம் வெளிப்பட்டுவிட்டது. பஷ்தூன் இந்திய பாம்புகளை நிராகரிக்கிறது எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.