நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்ட போது வீட்டில் .இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பல மணி நேரத்திற்கு பின்பு தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ விபத்து
- Master Admin
- 01 April 2021
- (475)

தொடர்புடைய செய்திகள்
- 29 May 2025
- (113)
உலகின் தலைசிறந்த தலைவர்கள் இந்த ராசியினர...
- 07 April 2021
- (531)
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு ந...
- 19 April 2021
- (544)
யாழ். பல்கலை வளாகத்தில் மீண்டும் திறக்கப...
யாழ் ஓசை செய்திகள்
வன்முறைக் கும்பல் கொடூரம் : இளைஞர் வெட்டிக் கொலை
- 31 May 2025
நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு
- 31 May 2025
திருகோணமலை டிப்பர் வாகன விபத்தில் முதியவர் பலி
- 31 May 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.