யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (29) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்திருந்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடிக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.