கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.