யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றையதினம் (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றையதினம் (17) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
- Master Admin
- 17 March 2021
- (871)

தொடர்புடைய செய்திகள்
- 05 June 2020
- (640)
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்...
- 10 February 2024
- (218)
காதல், அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க...
- 06 December 2024
- (133)
கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அதிர்ஷ்ட...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.