இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக் கவசம் அணியாததற்காக பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்க மாநில அரசாகங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வருகின்றனர்.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மார்ச் 19ம் திகதி மட்டும் 3062 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், பாம்பாய் மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர், முகக் கவசம் அணியாததற்காக பெண் ஒருவரிடன் அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார்.

இதனால், கோபமடைந்த பெண் மாநகராட்சி ஊழியரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளில் வசை பாடியுள்ளார்.

குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், தொற்றை கட்டுப்படுத்த தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர் மீது பெண் தாக்குதல் நடத்தியுள்ளது கேவலமான செயலாக உள்ளது என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.