பிரித்தானியாவில் இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக உயர் நிலை கல்வி மற்றும் மேல் நிலை கல்வி கற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பம் இருந்தால் தேர்வு எழுதினால் போதும்.

அவர்களுக்கு மதிப்பெண் அளிக்கும் பொறுப்பு முற்றிலுமாக ஆசிரியர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு முன் வைத்திருக்கும் ஒரு திட்டத்தின்படி, தேர்வாணையங்கள் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயார் செய்யும். என்றாலும், அவற்றை தேர்வுக்கு பயன்படுத்துவதா இல்லையா என்பதை ஆசிரியர்கள்தான் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கனவே முன்பு மாணவர்கள் எழுதிய வகுப்பு தேர்வுகள் அடிப்படையிலோ அல்லது சிறு தேர்வுகளை நடத்தியோ ஆசிரியர்கள் மதிப்பெண்களை முடிவு செய்வார்கள்.

இந்த சிறு தேர்வுகளைக் கூட பள்ளியில்தான் எழுதவேண்டும் என்று இல்லை, வீடுகளில் கூட எழுதலாம். அதையும் ஆசிரியர்களே முடிவு செய்யலாம்.

ஆக, மொத்தத்தில் இந்த ஆண்டு பிரித்தானிய மாணவர்களின் A-level மற்றும் GCSE தேர்வுகளின் முடிவுகள் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளன எனலாம்.