ராகு கேது பெயர்ச்சி 1 செப்டம்பர் 2020 அன்று நடந்தது. 01.09.2020 முதல் 21.03.2022 வரை ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.

தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் ராகு 05.01.2021 முதல் 12.09.2021 வரை சஞ்சரிக்கிறார். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகிணி நட்சத்திரத்திற்குத் திரும்பி இருக்கிறார்.

இவரோடு செவ்வாய் பகவான் ஏப்ரல் 14ம் தேதி வரௌ சேர்ந்து சஞ்சரிக்கிறார். மே மாதத்திற்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ராகு ஏற்கனவே ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவருடன் பிப்ரவரி 22 அன்று செவ்வாய் கிரகம் சேர்க்கிறார் வந்துள்ளது. ஜோதிட நூல்களில், சந்திரனை அதிபதியாக கொண்ட ரிஷப ரோகிணி நட்சத்திரத்தில் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவக் கிரகங்களின் பரிமாற்றங்கள் மிகவும் மோசமானவை என குறிப்பிடப்படுகிறது.

பேரழிவைத் தருகிறது

பகவான் கிருஷ்ணரும் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். மேதினி ஜோதிடத்தின் படி, ரோகிணி நட்சத்திரத்தில் பாவக் கிரகங்களின் சஞ்சாரம் செய்யும் போது மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளும், மிகவும் தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும்.

பிப்ரவரி 13 அன்று, ராகு ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார், அடுத்த செப்டம்பர் 20 வரை இருப்பார். ரிஷபத்தில் ராகுவின் சஞ்சாரம் செய்வது இந்தியாவுக்கு சில பிரச்னைகளைத் தரக்கூடியதாக இருக்கும். 1947 ல் நாடு பிரிக்கப்பட்ட நேரத்தில் வகுப்புவாத பதற்றம், 1965 இன் இந்தோ-பாகிஸ்தான் போர், 1984 ல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மற்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை மற்றும் 2002 குஜராத் கலவரம் ஆகிய காலங்களில் ராகு ரிஷபத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அதனால் ஒவ்வொரு 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரிஷபத்தில் சந்திரன் அதிபதியாக கொண்ட ரோகிணி நட்சத்திரத்தில் அவரின் எதிரியான ராகு நுழையும் போது ஏதேனும் பேரழிவைத் தரக்கூடியதாக இருக்கும்.

மார்ச் 12 முதல் ஏப்ரல் 3 வரையிலான நேரம்

ரிஷப ராசியில் செவ்வாய் கிரகம், மார்ச் 12 முதல் ஏப்ரல் 3 வரை ராகுவுடன் ரோகிணி நட்சத்திரத்தில் இணைந்திருக்கும். இயற்கை பேரழிவுகள் மற்றும் அரசியல் எழுச்சி காரணமாக இந்தியாவுக்கு இந்த நேரம் குறிப்பாக வேதனை தரக்கூடியதாக இருக்கும். பல பிரச்னைகளை ஆளும் அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும்

மார்ச் 24 அன்று ரோகிணி நட்சத்திரத்தின் மையத்தில் செவ்வாய் வரும் போது வட இந்தியாவில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இது சட்டம் ஒழுங்கு நிலைமையை கையாள்வதில் அரசாங்கத்திற்கு சவாலைத் தரும்.

விவசாயிகள் போராட்டம் கடுமையாக மாற வாய்ப்புள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு விசித்திரமான சூழ்நிலை ஏற்படலாம்.

சந்திர கிரகணத்திற்கு பிறகு சிக்கல் அதிகரிக்கும்

ரோஹிணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சஞ்சாரம் மார்ச் மாத நடுவில் வெப்பத்தை அதிகரிக்கும் கால நிலை மிக உஷ்ணமாக இருக்கும். இது வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு பருவமழை அசாதாரணமாக இருக்கும், இதன் காரணமாக வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பெரிய தலைவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை அடையும் விதமாக இருப்பார்கள். மே 26 சந்திர கிரகணத்திற்குப் பிறகு, சீனா இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை மீறி செயல்பட வாய்ப்புள்ளது.