பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது
- Master Admin
- 22 February 2021
- (463)
தொடர்புடைய செய்திகள்
- 20 February 2021
- (863)
நிதி நிறுவன உரிமையாளருடன் வீட்டிற்குள் ப...
- 10 January 2021
- (447)
இன்று 3 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா
- 25 February 2021
- (684)
மேலும் 4 ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா த...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
