பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது
- Master Admin
- 22 February 2021
- (435)

தொடர்புடைய செய்திகள்
- 11 January 2021
- (528)
இன்று 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா
- 04 March 2021
- (577)
189 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரி...
- 10 January 2021
- (484)
இன்று 4 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.