பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது
- Master Admin
- 22 February 2021
- (404)

தொடர்புடைய செய்திகள்
- 14 October 2020
- (334)
சசிகலாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்ப...
- 16 March 2021
- (514)
தற்போதைய கணவன் முன்னிலையில் மாஜி கணவரின்...
- 17 July 2023
- (389)
இளைஞரின் உயிரைப் பறித்த Momos... அதிர்ச்...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.