ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 209 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று 5 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,549 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 46 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமனில், கொரோனாவால் 277 பேர் பாதிப்பு
- Master Admin
- 18 February 2021
- (468)

தொடர்புடைய செய்திகள்
- 13 October 2020
- (433)
உலக அளவில் 3.80 கோடியை கடந்தது கொரோனா பா...
- 29 October 2023
- (1166)
பாடாய் படுத்தும் ராகு-கேது தோஷத்தை ஓட வி...
- 23 December 2020
- (1283)
இறால் விற்ற மூதாட்டியால் 689 பேருக்கு கொ...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.