செய்யாறு மின் கோட்டத்தில் சிறுங்கட்டூர் மற்றும் மாங்கால் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர், பல்லி, மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்ல பெரும்புலிமேடு, சுருட்டல், வடகல்பாக்கம், பாவூர், தூசி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.