திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் வினோதினி(வயது 21). பி.எஸ்சி. பட்டதாரி. இவர், தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட வினோதினியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் புஷ்பராஜ்(26) என்பவர் வினோதினியை கடத்திச்சென்றிப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.