நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 669 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் குறித்த அறிவிப்பை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அவர்களில் 09 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 660 பேரில் அதிக நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 130 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 104 பேரும் கண்டி மாவட்டத்தில் 48 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 16 பேரும் வவுனியா மாவட்டத்தில் 26 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் யாழ். மாவட்டத்தில் ஐவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 09 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.