இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 264 பேர் பலியாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,03,74,932 ஆகவும், பலி எண்ணிக்கை 1,50,114 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,615, மராட்டியத்தில் 3,160, சத்தீஸ்கரில் 1,021 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவல் இன்று காலை 8 மணி நிலவரப்படியானது.

இந்த நிலையில் இன்று மாலை வெளியிட்டுள்ள கேரளமாநில சுகாதாரத்துறை அறிக்கைப்படி, அம்மாநிலத்தில் இன்று புதிதாக 6394 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைவிட இன்று சுமார் 750 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபகுதி  கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இதுவரை 7,22,421 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை 65,057 நோய் தாக்கத்துடன் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.