கடந்த சில வாரங்களில் கிடைத்துள்ள விபரங்களை ஆராயும் போது வாகன விபத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஜூன் மாதம் 15ஆம் திகதியில் இருந்து மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் மாலை 4 மணி வரை அனைத்து பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு பொலிஸ் பிரிவில் குறைந்தது இரண்டு நேரம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தினமும் இந்த நேரத்தை பூர்த்தி செய்யும் காலத்தை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.