தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகள் வானிஸ்ரீ (வயது 21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த வானிஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.