திருகோணமலையில் இன்று (27) மதியம் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் அங்கிருந்து வெளியேறிய நீர் பள்ளத்தோட்டம் வரையான பகுதியை  சூழ்ந்துள்ளது.

புல்மோட்டை வீதி ஏகாம்பரம் வீதியில் 3 அடிக்கு மேலாக வெள்ளநீர் பாய்கிறது.

இப்பகுதி ஊடான போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

இதேவேளை அன்புவளிபுரம் மிகுந்தபுரம், ஆனந்தபுரி, அலஸ்தோட்டம்,  வரோதயநகர், துவரங்காடு, லவ்லேன், துளசி புரம் பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

 பெருமளவிலான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து உள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்