சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 23). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, பின்னர் திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்று கற்பழித்து பாலியல் கொடுமை செய்ததாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் வாலிபர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சிறுமி போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்