எட்டயபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் காலனி தெருவை சேர்ந்த முத்தையா மகன் முத்துராஜ் (வயது27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு முகிலா என்ற பெண் குழந்தை உள்ளது.

முத்துராஜ் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முத்துராஜிக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கற்பகவள்ளி ேகாபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் வேதனை அடைந்த முத்துராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.