ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது.
செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.
இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் அம்மன் தாயில் ரிலீஸூக்காக வெயிட்டிங்.
சினிமா ஹீரோயின் ஆகி விட்டால் சமூக வலைதளங்களில் கவர்ச்சிபுகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அதையும் பின் தொடர்ந்து வருகிறார் ஜூலி.
அந்த வகையில், சமீபத்தில் ஆடை ஏதும் அணியாமல் வெறும் மணலுக்குள் படுத்துக்கொண்டு படு மோசமான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு சன்னி லியோன் பரவாயில்ல போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.