சேத்துப்பட்டு, தச்சாம்பாடி, தேவிகாபுரம், அப்பேடு ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சேத்துப்பட்டு, உலகம்பட்டு, அப்பேடு, தேவிகாபுரம், தச்சாம்பாடி, நெடுங்குணம், மொடையூர், இடையான்கொளத்தூர், ஆத்தூரை, தும்பூர், நரசிங்கபுரம், குப்பம், பத்தியாவரம், ஒதலவாடி, கரிப்பூர், கங்கைசூடாமணி, அனாதிமங்கலம், நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, வில்லிவலம், மருத்துவாம்பாடி, கிழக்குமேடு, கோணாமங்கலம், கொத்தவாடி, பரிதிபுரம் ஆகிய கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல் வந்தவாசி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வந்தவாசி, கீழ்கொடுங்கலூர், புரசை, தெள்ளார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை சேத்துப்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர் ரவிசந்திரபாபு தெரிவித்துள்ளார்.