இன்று (08) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 703 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 371 பேர் கொழும்பு மாவட்டம், 102 பேர் கம்பஹா மாவட்டம், 64 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 17,396 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) கொழும்பு மீன் சந்தை கொத்தணி (21,962)

அதன் பிரகாரம் (07) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,579 ஆகும். அவர்களில் 20,803 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (07) ஆம் திகதி வரை 7,634 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (08) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 344 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று காலை (08) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கொழும்பு மற்றும் கொழும்பு 13 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் இன்று (8) ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 142 ஆகும்.

இன்று (08) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 40 பயணிகளும் பஹரேனில் இருந்து UL 202 விமான ஊடாக 288 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமான ஊடாக 104 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (07) அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 54 பயணிகளும் இதாலியில் இருந்து UL 1208 விமான ஊடாக 34 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து UL 504 விமான ஊடாக 56 பயணிகளும், இந்தியாவில் இருந்து UL 196 விமான ஊடாக 28 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை (08) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,878 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (07) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,831 ஆகும்.