திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பர்மா காலனி ஜெய்நகர் சாலையில் வீட்டின் மாடியின் அமைந்துள்ளது நினைவூட்டும் இட்லி கடை. பெயருக்கு ஏற்றவாறு இங்கு ஒரு முறை சாப்பிட்டால் அது நினைவில் இருந்து நீங்காது. அப்படி என்ன ஸ்பெ‌ஷல் என்றால், இங்கு விற்கப்படும் ஒரு இட்லியின் விலை ரூ.5, ஆனால் அதற்கு வழங்கப்படும் சட்னியின் வகைகள் 20. கேட்டாலே சிலிர்க்க வைக்கும் அளவுக்கு தக்காளி, கத்தரிக்காய், காரட், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், புதினா, மல்லி, சர்க்கரை, நாட்டு சர்க்கரை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, இட்லி பொடி, நல்லெண்ணெய் என வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


வீட்டில் ஒரு இட்லி கூட சாப்பிடாத குழந்தை இங்கு வந்தால் குறைந்த பட்சம் 4 இட்லி சாப்பிடுவதாக இதன் உரிமையாளர் பெருமை கொள்கிறார். இதுவரை விடுமுறையே விடப்படாத கடையில் நஷ்டம் என்பதே இல்லை என்பதோடு சேவை அடிப்படையில் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பார்சல் வழங்கினால் அது கெட்டுப்போய்விடும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளதோடு, தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இந்த இட்லி கடை செயல்படுகிறது.