இரண்டு கிராம் போதை மருந்திற்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.
கடந்த தினம் ஏற்பட்ட சம்பவத்தில் மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னர் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரித்தார்.
´எமது நாட்டில் 29 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் சராசரி திறன் 11 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போதைய நிலையில் சிறைச்சாலைகளில் சுமார் 25 ஆயிரம் கைதிகள் உள்ளனர்.
இதற்கு பின்னர், இரண்டு கிராம் போதை மருந்திற்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்விற்கு உட்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் மீண்டும் அதே குற்றத்தை செய்யாமல் இருப்பதற்கான பொறுப்பை அவர்களின் குடும்பங்கள் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்´. என சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.
2 கிராமுக்கும் குறைவு என்றால் சிறைச்சாலையில் புதிய வேலைத்திட்டம்!
