தமிழக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 14 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று வீடு திரும்பினர்.
அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 948 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
