திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று பிறப்பித்துள்ளார். கொட்போ,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 35,30,மற்றும் 26 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.