முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று (26)காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (26) தடயவியல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் இந்த குண்டு அண்மையில் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த குண்டுகள் எவ்வாறு இங்கு வந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இன்று (27) அதிகாலை 5.30 தொடக்கம் காலை 10 மணிவரை குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாங்குளத்தில் நேற்று வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு! வெடித்த இடத்தில் மேலும் ஒரு குண்டு மீட்பு!
- Master Admin
- 28 November 2020
- (312)

தொடர்புடைய செய்திகள்
- 03 March 2021
- (1181)
கொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்...
- 23 June 2025
- (70)
சோமவார பிரதோஷத்தில் சிவன் அருள் பெற எள...
- 30 January 2024
- (1364)
500 ஆண்டுக்கு பிறகு கேதார யோகம்... ஜாக்ப...
யாழ் ஓசை செய்திகள்
நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
- 23 June 2025
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
- 23 June 2025
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 23 June 2025
இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை
- 23 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.