போகம்பரை பழைய சிறைச்சாலையில் பணிப்புரிந்த சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள இருவரும்,  சிகிச்சைக்காக தெல்தெனியாவிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டிலுள்ள சிறைகளில் அதிகளவான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னுனொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கான ஆபத்து காணப்படுகின்றதென சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க  எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.