ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசிகளை கடக்கும் புதன், அவ்வப்போது வக்ரம் மற்றும் அஸ்தமன நிலையிலும் பயணிப்பார்.

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

எனவே புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி வரை இருப்பார்.

அஸ்தமன நிலையில் புதன் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படும்.

சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இந்த தாக்கம் அமையலாம். எனவே தற்போது புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், எந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

 

மேஷம்

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

 

புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை.

வேலை அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கன்னி

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், பண விஷயங்களில் கன்னி ராசிக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம்.

வணிகர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். செப்டம்பர் 18 வரை பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

எனவே அவசர முடிவுகளைத் தவிர்த்து, அமைதியாகச் செயல்படுங்கள். அலுவலகத் தகராறுகளை பெரிதுபடுத்தாமல், கவனத்துடன் முடிவெடுப்பது நல்லது. பெரிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு