தளபதி விஜய் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இனி இவரை ஒரு நடிகராக மட்டும் நம்மால் பார்க்க முடியாது, இந்தியாவின் அரசியல் பெரும்புள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டார். ஆம், இவரின் ஆளுமையை மே 4 அன்றே தமிழகம் தாண்டி இந்தியாவே பார்த்துவிட்டது.

இந்நிலையில் முதல்வர் விஜய் அவர்களின் மகன் சஞ்சய் சமீபத்திய தன் படமான சிக்மா ப்ரோமோஷனில் தன் தந்தை குறித்து பல சுவாரஸ்ய தகவலை கூறி வருகிறார்.

இதில் குறிப்பாக என் அப்பா ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனால் எங்களுக்கு பொறுப்பு அதிகமாகி விட்டது, அதோடு எந்த உதவியாக இருந்தாலும் என்னை கேள் என்று கூட கூறினார் என கூறி முதல்வர் குடும்பம் குறித்த அனைத்து கேலி பேச்சுகளுக்கும் சஞ்சய் பதிலடி கொடுத்துள்ளார்.