சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் ஏன் தக்காளி சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரக கல்
சிறுநீரகத்தில் கற்கள் என்பது இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. வலிமிகுந்த காணப்படுவதுடன், இதனால் பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள தாதுக்கள் அல்லது உப்பு குவிந்து கடினமான துகள்களின் வடிவத்தினால் இது ஏற்படுகின்றது.
இதனை சின்ன சின்ன அறிகுறிகளை வைத்து ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் தீவிரமாகாமல் இருப்பதுடன், விரைவில் குணமாக மருத்துவரையும் சந்திக்கலாம்.
சிறுநீரக நோய் என்பது வாழ்க்கை முறை, மரபியல் காரணங்களால் ஏற்படலாம் என்றும் உடல் செயல்பாடு, உணவுமுறையைக் கொண்டு இதனை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகின்றது.
ஏன் சாப்பிடக்கூடாது
சிறுநீரக கல் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் கால்சியம் ஆக்சலேட் ஆனால் நாம் உணவில் அன்றாட சேர்க்கும் தக்காளியில் ஆக்சலேட் மிகவும் குறைவாக உள்ளது.
இது சாதாரண மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் தராது, ஆனால் சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இந்த நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பாதிப்பை தரும்.அதனால் அவர்கள் தக்காளியை ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொண்டால் நல்லது.
சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு முக்கியமான காரணம் நீர்ச்சத்து குறைவு.நாம் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இது நமக்கு சிறுநீரக கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
அது மட்டுமின்றி கீரை,உப்பு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகக்கல் உருவாகும்.அது மட்டுமின்றி அவர்கள் உணவு பழக்கத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அதாவது அவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகக் கற்களுக்குத் தக்காளியை விட உடலில் நீர்ச்சத்து குறைதல் ஒரு முக்கியக் காரணமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், கழிவுகள் சிறுநீரில் சேர்ந்து கற்களாக மாறுகின்றன. மேலும், அதிக உப்பு மற்றும் கீரை போன்ற அதிக ஆக்சலேட் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். வெறுமனே தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் உருவாகும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

அப்படியும் அவர்கள் சாப்பிட வேண்டுமானால் அவர்கள் மருத்துவரின் ஆலோசையை கேட்டு சாப்பிட்டல் நல்லது.
