இந்திய கிரிக்கட் விரர் ஒருவர் விவாகரத்து பறெ்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்தாலும் 25 கழித்து இன்று வரை ஒரு சட்ட போராட்டத்தில் தான் இருக்கிறார். எதற்காக என்பதை தொடர்ந்து பார்க்கலாம். 

விவாகரத்து பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் - 25 வருட சட்ட போராட்டம் ஏன்? | Indian Cricketer Marries Divorced Woman History

இந்திய கிரிக்கட் வீரர்

பல இந்திய கிரிக்கட் வீரர்களின் காதல் கதைகளை நாம் கேளிவிப்பட்டிருப்போம். அதோ போல தான் இன்றும் ஒரு சுவாரஷ்ய தகவல் சிக்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே விவாகரத்து பறெ்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் இன்றுவரை அவருடைய வளர்ப்பு மகளை திரும்ப பெற அவர் சட்டிதின் முன்னிலையில் போராடிக்கொண்டு இருக்கிறார்.

விவாகரத்து பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் - 25 வருட சட்ட போராட்டம் ஏன்? | Indian Cricketer Marries Divorced Woman History

இந்திய கிரிக்கெட்டிற்கு அனில் கும்ப்ளே எவ்வளவு பங்களித்துள்ளார் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் தெரியும்.

இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின் பௌலர் என்றால் அது கும்ப்ளேவைத் தவிர வேறு யாரையும் தேர்வு செய்ய முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர் தான்.

மொத்தம் 956 விக்கெட்டுகள். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ஒரே இந்திய கிரிக்கட் வீரர் இவர் தான். 

விவாகரத்து பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் - 25 வருட சட்ட போராட்டம் ஏன்? | Indian Cricketer Marries Divorced Woman History

கும்ப்ளேவின் தனிப்பட்ட வாழ்க்கை பலருக்குத் தெரியாத ஒரு விடயம். இவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்.

கும்ப்ளேவின் திருமணம் கொஞசம் வித்தியாசமானது. அவர் காதலித்து தான் திருணம் செய்து கொண்டார். ஆனோல் அவர் காதலித்த பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தார்.

இந்த காரணத்தினால் கும்ப்ளே அவரின் காதலை  அந்த பெண்ணிடம் வெளிக்காட்டவில்லை. அந்த பெண்ணின் பெயர் சேத்தனா ராமாதீர்த்தா.

இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் கும்ப்ளே அவரை காதலித்துள்ளார். 

விவாகரத்து பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் - 25 வருட சட்ட போராட்டம் ஏன்? | Indian Cricketer Marries Divorced Woman History

சேத்தனாவிற்கு ஒரு பெண் குழந்தை இருந்தது அதன் பெயர் ஆருணி. சேத்தனாவிற்கு அவருடைய முதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாததால், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழப்போவதாக முடிவெடுத்துள்ளார்.

இந்த முடிவை சேத்தனா கும்ப்ளேவிடம் பகிர்துள்ளார். அப்போது கும்ப்ளே சேத்னாவின் மிகவும் நம்பிக்கையான நண்பனாக இருந்துள்ளார். 

சேத்தனா மீது காதலில் கும்ப்ளே இருந்தாலும் சேத்தனாவின் சொந்த கஷ்டமான விடயங்களிலும் அவர் பங்கெடுத்து பக்க பலமாக நின்றுள்ளார்.

இதன் பின்னர் சேத்தனா எந்த திருமண வாழ்க்கையும் தேவையில்லை என்று தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் கும்ப்ளே தன் னாதலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆனால் சேத்தனா கும்ப்ளேவிடம் "நான் மீண்டும் ஒரு திருமண பந்தத்தில் இணையத் தயாராக இல்லை" என்றும் கூறினார்.

விவாகரத்து பெண்ணுடன் இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் - 25 வருட சட்ட போராட்டம் ஏன்? | Indian Cricketer Marries Divorced Woman History

ஆனால் காலம் கடந்து போக போக கும்ப்ளேவின் உண்மையான அன்பு சேத்தனாவை மீண்டும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது. இதன் பின்னர் இருவரும் 1999-ல் திருமணம் செய்துகொண்டனர்.

விவாகரத்து பெற்றிருந்தாலும் சேத்தனாவுக்கும் அவரது முதல் கணவருக்கும் இடையே தங்கள் பெண் குழந்தை ஆருணியின் வளர்ப்பு உரிமை தொடர்பாக வழக்கு போய்கொண்டு இருந்தது.

இந்த கடினமான காலத்திலும் அனில் கும்ப்ளே சேத்தனாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் ஆருணியை தனது மகளாக கருதி அவரது வளர்ப்பு உரிமைக்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.

ஆருணியை தனது சொந்த மகளாகவே கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். ஜனவரி 2004-ல் உச்ச நீதிமன்றம் சேத்தனாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

அனில் கும்ப்ளே - சேத்தனா தம்பதிக்கு ஸ்வஸ்தி என்ற மகளும், மாயாஸ் என்ற மகனும் இருக்கின்றனர். அனால் ஆருணியை தான் அவர்கள் அவர்களுடைய மூத்த வாரிசாக வளர்த்து வருகின்றனர்.

சேத்தனா மீது வந்த காதலால் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கும்ப்ளே - சேத்தனா தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்துள்ளனர்.