நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேராதனை,ஸ்ரீ ஜயவர்தனபுர,யாழ்ப்பாணம்,ருஹுனு  மற்றும் மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.