தற்போத சதயம் நட்சத்திரப்பெயர்ச்சியில் இருக்கிறார். சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் பலன்களை தருகிறார்.
சனி பகவானுக்கு அனைத்து மக்களும் பயப்படுவார்கள்.சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் சனி பகவான் பயணம் செய்தார்.
இது அனைத்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதியன்று ராகு பகவானின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார்.இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
- சனி பகவான் கும்ப ராசியில் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதால் நன்மை மட்டுமே உங்களை வந்து சேரும்.
- தற்போது சனி பகவான், கும்பத்திலேயே பயணித்து வருவதால் தொழிலில் இருந்த பிரச்சனை தீரும்.
- தொழிலில் முன்னேற்றக்கூடிய உதவியாளர்கள் கிடைப்பார்கள்.
- பணியிடத்தில் சக ஊழியர்கள் முன்னிலையில் மதிப்புடையவராக மாறுவீர்கள்.
- வியாபார பொருட்களை வாங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
- திருமணமானவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்
- இந்த சதய பெயர்ச்சி ரிஷப ராசியினருக்குப் போதுமான அளவு நற்பலன் கிடைக்கிறது.
- பணி மற்றும் தொழிலில் இத்தனை நாட்களாக கிடைக்காத வாய்ப்புபொருளாதார முன்னேற்றம் மூலம் கிடைக்கும்.
- தொழில் முனைவோருக்கு நல்ல லாபம் கிட்டும்.
- வேலை தேடுபவர்கள் நல்ல லாபத்தை சம்பாதிப்பிர்கள்.
- உங்களுடன் தொழிலில் போட்டியில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.
மிதுனம்
- நீங்கள் சனியால் சோம்பலை விட்டு வேலை செய்வதால் வெற்றியை நோக்கி செல்ல போகிறீர்கள்.
- வெளி பயணம் சென்று தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி ரீதியிலான பலன்கள் கிடைக்கும்.
- வியாபாரங்களின் பேச்சுத் தன்மையால் நிறைய ஆர்டர்களைப் பிடிக்கலாம்