திருமணம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களினது வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிலரது வாழ்க்கையில் திருமணம் பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தும்.
இது சில சமயங்களில், சிறப்பாகவும் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்த திருப்பங்கள் அவர்களின் வாழ்க்கை துணையை பொருத்து தான் அமைகின்றது.
மாங்கல்ய தோஷமுள்ளவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை காணலாம் என பலரும் பேசிப் பார்த்திருப்போம்.
அந்த வகையில் மாங்கல்ய தோஷத்தினால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின் போது சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், ஜாக்கெட் போன்றவற்றை கொடுத்து உணவளிக்க வேண்டும்.
பின்னர் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
வீட்டில் அல்லது கோயிலில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
திருமணம் செய்வதற்கு முன்னர் இப்படியான தோஷங்கள் இருந்தால் அவற்றை சரிச் செய்த பின்னர் திருமணம் செய்யலாம்.
பரிகாரம் செய்யும் போது இரண்டு மணி நேரத்திற்கு மாத்திரம் தாலியை கழட்டி வைக்க வேண்டும். யார் தாலியை கழட்டினாரோ அவர் கையால் மீண்டும் அணிந்து கொள்வது சிறந்தது.