அழகை மேம்படுத்த தயிர் மற்றும் கடலைமாவு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இந்திய பெண்கள் தனது அழகை பராமரிக்க அதிக கவனம் செலுத்துவார்கள். இதற்கு ஆயுர்வேதமும் உதவியாக இருக்கின்றது.
சந்தையில் என்னதான் புதிய புதிய தோல் பராமரிப்பு பொருட்கள் வந்தாலும், பழமையான வீட்டு வைத்தியத்தை தான் பலரும் விரும்புகின்றனர்.
தற்போது வீட்டிலேயே சொந்தமாக ஆயுர்வேத பாடி வாஷ் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடலைமாவு 2 ஸ்பூன் பவுல் ஒன்றில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும். இயற்கையான பாடி வாஷ் தற்போது தயார்.
பயன்கள்
கடலை மாவு சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்துவதுடன், முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகின்றது.
தயிர் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைக்கின்றது. இதே போன்று எலுமிச்சை சாறு புத்துணர்ச்சியூட்டுகின்றது.