அமெரிக்காவில் தாய் ஒருவர் ஒரு மாத பெண் குழந்தையை மைக்ரோவேவ்வில் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கன்சாஸ் நகரில் தாய் ஒருவர் தனது ஒரு மாத குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு பதில் மைக்ரோவேவ்வில் வைத்துள்ளார்.

இதனை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், சோதனை நடத்தியதில் உயிரிழந்த குழந்தைக்கு பலத்த தீக்காயங்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குழந்தையின் உடல் கருகிய நிலையிலும், குழந்தை அணிந்திருந்த டயப்பரும் எரிந்த நிலையில் இருந்துள்ளது. வீட்டில் புகை நாற்றம் வீசிய நிலையில், எரிந்த நிலையில் குழந்தையின் போர்வையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1 மாத குழந்தையை மைக்ரோவேவ்வில் வைத்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் | Us Mother Puts Month Old Baby In Oven Instead

குழந்தையின் தாய் மரிய தாமஸ்(26) என்பவர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. பொலிசார் மரிய தாமஸை கைது செய்துள்ளனர்.

பொலிசார் தாத்தா தாமஸை விசாரித்த போது, தன் குழந்தையை தூங்க வைப்பதற்கு தொட்டிலில் போடுவதற்கு பதிலாக மைக்ரோவேவ்வில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், மரிய தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.