உப்பு தண்ணீர் மூலம் முகத்தினை கழுவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உப்புத்தண்ணீரில் குளித்தால் முடி கொட்டிவிடும் என்று பலரும் நினைக்கும் இத்தருணத்தில், முகம் கழுவும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கழுவினால் சருமத்தில் மாற்றம் ஏற்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
உப்பு தண்ணீரில் முகம் கழுவினால் என்ன பயன்?
- உப்பு தண்ணீரில் முகம் கழுவினால் பாக்டீரியாக்களை முதலில் வெளியேற்றுவதுடன், சருமத்தில் திறந்திருக்கும் பெரிய துளைகளைச் சுருக்கி, அவற்றினுள் தேங்கியிருக்கும் சீபம் மற்றும் எண்ணெய்களை உறிஞ்சி வெளியே எடுக்கின்றது.
- பருக்கள் மற்றும் சரிம நோய்களான சொரியாசிஸ், எக்ஸிமா உட்பட்ட பல நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.
- குறிப்பாக கடல் உப்பில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
- குறிப்பாக மேக்கப் போடுவதற்கு முன்பு உப்பு நீரால் முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது.
- கடல் உப்பை பொடித்து சருமத்தில் ஸ்கிரப் போல பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.
- சென்சிடிவ் சருமம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தங்களுடைய சருமப் பராமரிப்பில் கடல் உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- கடைகளில் எப்சம் உப்பு என்று சொல்லப்படுகிற உப்பு சருமப் பிரச்சினைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கிறது.