திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பகொட்ட பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று இன்று (16) பதிவாகி உள்ளது.
வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டியதில் சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு பாம்பு தீண்டிய சிறுவன் திருகோணமலை - கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10வயது) எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதி
- Master Admin
- 16 May 2021
- (820)

தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (447)
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின்...
- 10 April 2025
- (94)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மைய...
- 19 January 2021
- (450)
போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்பக...
யாழ் ஓசை செய்திகள்
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
- 23 April 2025
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!
- 23 April 2025
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
- 23 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.