கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை (28) மாலை மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில் நேற்று (30) இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) மற்றும் எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) (மரணித்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறையில் சோகம் - மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!
- Master Admin
- 01 May 2021
- (436)

தொடர்புடைய செய்திகள்
- 19 February 2025
- (92)
இந்த ராசியினர் காதல் வாழ்க்கையில் துரதிர...
- 06 June 2025
- (204)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
- 02 November 2023
- (626)
காதலா.. காமமா.. காதலிக்கும் முன் இத கண்ட...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.