கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணை மீண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (20) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றில இடம்பெற்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதன்போது குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகளை நாளை காலை 10 மணி வரையில் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலஙகை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கை கேந்திரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தகவல் தொழிநுட்ப தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான பொறியியலாளர் ஜீ.கபில ரேணுக பெரேரா உள்ளிட்ட தரப்பினர்களால் சுமார் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகரம் - மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
- Master Admin
- 20 April 2021
- (360)

தொடர்புடைய செய்திகள்
- 16 June 2025
- (130)
இன்றைய தினம் மிதுன ராசி உட்பட 5 ராசிகளுக...
- 30 May 2025
- (149)
வீட்டிலேயே கெட்டியான,சுவையான தயிர் செய்ய...
- 16 June 2025
- (79)
வெள்ளியில் மூக்குத்தி அணிந்து பாருங்க......
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.