தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை இடம்பெற்ற பகுதியை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 10 உயரமான சுமார் 7000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் இருந்தால் 1997 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.