பிரித்தானியாவின் Leedsல் வெவ்வேறு இடங்களில் இரண்டு வாரத்தில் பெண்களிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய 15 வயது சிறுவனை பொலிசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு 55 வயதான பெண் அங்குள்ள பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரருகில் வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பொலிசாரை அழைப்பேன் என கத்திய பின்னர் அவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த சம்பவத்துடன் கடந்த வாரம் நடந்த மூன்று சம்பவங்களையும் பொலிசார் ஒப்பிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த வாரம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு சாலையில் சென்ற 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தும் வகையில் திடீரென தவறாக தொட்டு மோசமாக நடந்திருக்கிறான்
அதே வாரத்தில் 19 மற்றும் 30 வயதுடைய பெண்கள் மீதும் இதே போல மோசமான தாக்குதலை நடத்தியுள்ளான்.
அவன் வயது 15 என கூறப்படும் நிலையில் 15ல் இருந்து 18க்குள் கூட இருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து டிடெக்டிவ் ஜேம்ஸ் எண்ட்விசில் கூறுகையில், இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், அவற்றில் ஏதேனும் சாட்சியம் அளித்த எவரிடமிருந்தும், குறிப்பாக நேற்றிரவு நடந்த குற்றத்திலிருந்தோ அல்லது விசாரணைக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல்களைக் கொண்டவர்களிடமிருந்தோ கேட்க விரும்புகிறோம்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணிகளை பொலிசார் அதிகரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.