2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தெரிவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார்.

ரான்ஸ்பரன்ஸி இன்ரர்நஷனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) நிறுவனத்தால் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் வாக்கெடுப்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன் பொதுமக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்தத் தேர்தல் நேற்றுமுன்தினம் 22ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்தன. இதனையடுத்து, இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாகத் தெரிவுசெய்யப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதர்ஷனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதினை முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வழங்கிவைத்தார்.