திருகோணமலை - ரங்கிரிபொத்த உல்பொத்த பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (23) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங்கடவல - நாவுல் பொத்த பகுதியைச் சேர்ந்த ஆர்.ராஜகருணா (50 வயது) எனவும் தெரிய வருகின்றது.
குறித்த நபர் வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கிக்குப் போடுவதற்கு ரவைகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் செய்த ரவைகள் வெடித்ததிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்தவர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தற்பொழுது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்
- Master Admin
- 23 January 2021
- (363)

தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (361)
2020 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்க...
- 11 December 2020
- (363)
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு அற...
- 25 January 2021
- (488)
தனது 2 பிள்ளைகளை இழந்த தந்தையின் கோரிக்க...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.