கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் மகரஜோதி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பொங்கல் தினத்தனற்று பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்து கொண்டனர்.
மாலை அணிவித்து விரதம் இருந்த கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் குடிகிரி கிராம பக்தர்கள் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். அப்போது தீ மிதித்தும், கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலாகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செய்தனர்.