அம்பாறை – அக்கரைப்பற்று பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
அட்டாளைச்சேனை பகுதியில் சகோதரியின் கணவருக்கும் குறித்த சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் காயமடைந்த சிறுவன் உடனடியாக அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மைத்துனரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
