நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் முடிவு ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து குஷ்பு அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "அன்பார்ந்த ரஜினிகாந்த், உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை, நலனை விட எதுவும் பெரிதல்ல என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் நல விரும்பியாக, தோழியாக உங்கள் முடிவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் விசேஷமான, முக்கியமான நபர். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் இருங்கள்". இவ்வாறு குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.