சித்ரா தற்கொலை குறித்து கடந்த 5 நாட்களாக விசாரணை செய்து வந்த காவல் துறையினர், சித்ராவின் கணவர் ஹேமந்தை தீவிர விசாரணை செய்த பின்னர் கைது செய்தனர். ஹேமந்த் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. 

சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இரண்டு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஒன்று ஸ்டார்ட் மியூசிக். இந்நிலையில் நடிகை சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

ஸ்டார்ட் மியூசிக் விளம்பரத்தில் சில மணிநேரங்களுக்குப் பிறகு நடந்ததற்கு முற்றிலும் மாறாக சித்ராவை மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுகிறார். 

சிக்கிய ஆடியோ ஆதாரம்

காதல் கணவர் ஹேம்நாத், தன்னை சித்ரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின், தற்கொலைக்கு காரணமான நிஜ காதலன் கணவன் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 

இந்த நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் காதல் கொண்ட சித்ராவின் சிக்கு புக்கு ஆட்டத்தால் ஆத்திரம் அடைந்த ஹேம்நாத் அவருக்கு கொடுத்த நெருக்கடிகள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஆரம்பத்தில் தொழில் அதிபர் என நம்பி ஹேம்நாத்தின் காதல் வலையில் விழுந்துள்ளார் நடிகை சித்ரா. சீரியலில் முல்லை - கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன திறமையை காட்டுவதற்காக காட்டிய நெருக்கம் அவர்களுக்குள் இறுக்கமாகி விடுமோ என்று சந்தேகம் கொண்ட ஹேம்நாத் சித்ராவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளான். 

நடன நிகழ்ச்சியில் வரவேற்பு பெற்ற முல்லை - கதிர் ஜோடிக்கு இடையே விரிசல் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கதிர் திருமணமானவர் அதனால் அவருடன் இனி தன்னால் ஆட முடியாது என்று முல்லையின் வாயால் பலரது முன்னிலையில் சொல்ல வைத்து சீரியல் காதலை சீரியசாக பிரித்து வைத்துள்ளான் ஹேம்நாத். 

சீரியலில் நடிக்கக்கூடாது என மிரட்டல்

ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று தடை போடும் நிலைக்கு சென்றுள்ளான். இதையடுத்து மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய சித்ரா, இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஹேம்நாத் செய்யும் டார்ச்சர்கள் குறித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார் இந்த குரல் பதிவு சித்ராவின் செல்போனில் பதிவாகி இருந்த நிலையில் ஹேம்நாத் அதனை அழித்தது சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

ரெகவரி சாப்ட்வேர் மூலம், அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்ட காவல்துறையினர் அந்த குரல் பதிவில் சித்ரா தனது மாமனாரிடம் தெரிவித்த புகார்களை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத்தை கைது செய்ததாக தெரிவித்தனர். 

சித்து விளையாடிய மாமனார்

மாமனார் செல்போனில் உள்ள அழைப்பு விவரங்கள் மூலம் சித்ரா அவருடன் பேசி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். தன்னுடைய மகன் குறித்து புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கை அல்லது அந்த பிரச்சனயை தீர்க்கவோ மாமனார் முன்வரவில்லை போல் தெரிகின்றது.

இதற்கிடையே யாரையோ காப்பாற்ற தன் மகனை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறி இருப்பது விவகாரத்தை திசை திருப்பும் செயல் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சித்ராவின் தற்கொலை தொடர்பான விசாரணை முடிவில் தடயங்களை மறைத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.